Print this page

நாடு முழுவதும் விபத்தினால் நேற்று மட்டும் 12 பேர் பலி!

November 01, 2021

 நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் களில் 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாட்டில் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Last modified on Tuesday, 02 November 2021 04:11