Print this page

திறக்கப்பட்டது பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள்

November 02, 2021

ரஜரட்ட பிரதேசத்தில், பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் கல்நேவ , ஹிரிப்பிட்டியாகம மற்றும் அவ்கன வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதியில் வாழ்ந்து வருவோர் அவதானத்துடன் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.