Print this page

27 கிராம் ஹெராயினுடன் ஒன்பது பேர் கைது

November 08, 2021

சனிக்கிழமை (6) அனுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக ஒன்பது பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு மேலதிகமாக மூன்று ஆண்களும் 06 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை அநுராதபுரம் துணைத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சனிக்கிழமை (6) பிற்பகல் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட போது ஒரு குழுவினர் அதிகாரிகளை சுற்றி வளைத்து கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பின்னர் பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Last modified on Monday, 08 November 2021 07:50