Print this page

பல மாகாணங்களில் இன்று கனமழை பெய்யும்

November 17, 2021

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்:

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

ஆழ்கடல் பகுதிகளில் (தீவின் கிழக்கு) செயற்படும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Last modified on Wednesday, 17 November 2021 05:42