Print this page

பெண்களுக்கு நீதி கோறி நாடாளுமன்றத்தில் போராட்டம்

November 25, 2021

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான இன்று (25) இலங்கையில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் மௌனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வாய்மொழி துன்புறுத்தலாக கருதப்படும் (වම්බටු ගහල පලාගත්තාද) அறிக்கைகளை வெளியிட்டதை அடுத்து இது இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் உரையாற்றிய SJB பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

“பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொச்சையான கருத்துக்களை வெளியிட அனுமதிப்பதன் மூலம் இலங்கையின் நாட்டிற்கும் ஆண்களுக்கும் அரசாங்கம் என்ன மாதிரியான உதாரணத்தை உருவாக்குகிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது, ஏனெனில் இதுபோன்ற மோசமான நடத்தையை அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறது. இலங்கையில் 5ல் 1 பெண்கள் வாய்மொழியாகவோ, பாலியல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். இது மிக அதிகமான எண்ணிக்கையாகும், மேலும் அரசாங்கம் இதை நோக்கி கண்மூடித்தனமாக உள்ளது, ”என்று அவர் மேலும் கூறினார்.

Last modified on Thursday, 25 November 2021 15:59