Print this page

சர்ச்சைக்குரிய திட்டங்களை முன்வைப்பதில் பெயர் பெற்ற அமைச்சர்.

December 20, 2021

கூப்பன் முறைக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

அமைச்சரவை அமைச்சர் ஒருவரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர் தனது முன்மொழிவுக்கு இரண்டு காரணங்களையும் கூறியுள்ளார்.

எரிபொருள் பாவனை அதிகரிப்பு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான டொலர் தட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்வைத்து அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார்.

அதிகரித்து வரும் எரிபொருள் பாவனை மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான டொலர் தட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்வைத்து அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

எரிபொருளைக் கொண்டுவருவதற்கு மாதாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 80,000 மில்லியன்) செலவாகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்ததை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரவை அந்த முன்மொழிவை நிராகரித்துள்ளது.

அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார இருவரும் மிகவும் நெருக்கமான அமைச்சர்கள்.

அமைச்சரவை முடிவு

இந்த யோசனை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, 1977 ஆம் ஆண்டு ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு கடுமையாகத் தோற்கடிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான சமகி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினராவார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சர்ச்சைக்குரிய பிரேரணைகளை முன்வைப்பதில் பிரபலமானவர்.

 

Last modified on Monday, 20 December 2021 04:34