Print this page

அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டி ஆரம்பமாகியுள்ளது

December 23, 2021

முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்ன, அடுத்த ஜனாதிபதியாக கனவு காணும் 9 பேர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவரும் மேலும் இரு முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, கீர்த்தி தென்னகோன் மற்றும் இரண்டு சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக்க மற்றும் குணரத்ன வன்னிநாயக்க ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

UNP தூதுக்குழு

இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது திரு.குணரத்ன, வருங்கால ஜனாதிபதியாக கனவு காணும் நபர்கள் பின்வருமாறு வெளிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, அர்ஜுன ரணதுங்க, கரு ஜயசூரிய மற்றும் அனுரகுமார திஸாநாயக்க.

கனவின் எதிர்காலம்

தனிப்பட்ட பெயர்களை விட பொதுவான வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய திரு.குணரத்ன, அந்த மாமனிதர்களின் ஜனாதிபதி கனவுக்கு களங்கம் ஏற்படுத்தவோ அல்லது நிறைவேற்றவோ விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய திரு.குணரத்ன, பொதுவான வேலைத்திட்டமொன்றின்றி முன்னோக்கிச் செல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

Last modified on Thursday, 23 December 2021 08:12