Print this page

திமுத் கருணாரத்ன பொலிஸாரால் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை, கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், திமுத் கருணாரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன பயணித்த கார், முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதுடன், முச்சக்கரவண்டி சாரதி சிறு காயங்களுடன் கொழும்பு, தேசிய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரை செலுத்திய திமுத் கருணாரத்ன, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:50