Print this page

கதவு விழுந்து மூன்று வயது சிறுமி பழி

December 26, 2021

பெரிய உலோகக் கதவு இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை சிறுமியும் அவரது நான்கு வயது உறவினரும் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், குழந்தைகள் கதவோடு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அது திடீரென இருவர் மீதும் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும் சிறுமியை அனுமதிக்கும் போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த சிறுவன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.