Print this page

குழப்பமான வேலைத்திட்டத்தில் அரசாங்கம்! ஜனாதிபதி பதவி நீக்கும்வரை வாசு, விமல், உதய காத்திருப்பு!!

February 01, 2022

 

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றதால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளதாகக் கூறி தான் உள்ளிட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரை எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியை விட்டு வௌியேற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் தங்களுக்கு அதனை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பிரச்சினையை தீர்க்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோருக்கு தேவையான ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.

சுபீட்சத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அப்பாற்பட்ட குழப்பமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

தங்களிடம் இருந்து அமைச்சுப் பதவியை பறிந்து தாம் அரசாங்கத்தை இழந்தாலும் "நாட்டை அழிக்க முடியாது" என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

காணொளி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.