Print this page

இராஜாங்க அமைச்சரின் பதவிக்கு ஆப்பு! அமைச்சரின் மகனும் அதிரடியாக கைது

February 03, 2022

 

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவின் மகன் ஜெஹான் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் சென்று ஆஜரான பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம வைத்தியபீட மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எத்தனோல் கடத்தல் வழக்கில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரபுக்கள் வருகை பிரிவின் ஊடாக அழைத்து பொலிஸ் நிலையத்தில் பிணை பெற்றுக் கொடுத்த சம்பவத்தில் அருந்திக்க பெனாண்டோ மீது ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.