Print this page

16 வயது இலங்கை சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த காமுகன்

February 06, 2022

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் அச்சப்பன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.