Print this page

மேலும் 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது

February 08, 2022

 

கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.