Print this page

அமைச்சரின் மகனின் அடாவடியால் நிறுவனத் தலைவருக்கு ஏற்பட்டுள்ள கதி!

February 08, 2022

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ராகம வைத்திய பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்று தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோவின் மகன் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதால் இராஜாங்க அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.