Print this page

குடு 'அபா' கொலை! அதிகாலையில் பயங்கரம்!

February 11, 2022

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வியாபாரியான 'அபா' எனப்படும் துலான் சமீர சம்பத் கொல்லப்பட்டுள்ளார்.

மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் அடைந்த போதை பொருள் கடத்தல்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

Last modified on Friday, 11 February 2022 06:23