Print this page

இன்று தீர்மானம்!

February 12, 2022

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற உள்ளன.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


இதேவேளை பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும் நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க வேண்டியுள்ளார். 

குறித்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கினால் மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார் .

Last modified on Saturday, 12 February 2022 05:53