Print this page

அநுராதபுரம் பேரணியில் கலந்து கொண்டோருக்கு 4 கொள்கலன்களில் அரிசி விநியோகம் - ராஜித

February 15, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் சல்காதுப்பிட்டியவில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி விநியோகித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப் பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் 40 அடி அரிசிக் கொள்கலன்கள் நான்கு கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்ததாக அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.