Print this page

பெட்டிப் படுக்கையுடன் வீடு செல்ல தயாராகி வரும் பிரபல இராஜாங்க அமைச்சர்!

February 16, 2022

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சின் உடமைகளை சுத்தம் செய்து வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது அமைச்சின் தனிப்பட்ட அலுவலர்களையும் அவர் நீக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் பிரபல இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவே இவ்வாறு வீடு செல்ல தயாராகி வருவதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் பதவியில் பணியாற்றுமாறு அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாலும், சில அமைச்சு அதிகாரிகளின் பணிகளில் அவருக்கு ஆதரவு கிடைக்காததாலும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லான்சா நெடுஞ்சாலைகள் துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதன் அமைச்சரவை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளார். இருவரும் கத்தோலிக்கர்கள்.

எவ்வாறாயினும், ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க தவறியமை குறித்து இராஜாங்க அமைச்சர் லான்சா பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

குறிப்பாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் நுழைவாயிலின் திறப்பு விழாவை இராஜாங்க அமைச்சர் லான்சா புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.