Print this page

மன்னாரில் நடந்த மர்மம்

February 21, 2022

மன்னாரிலுள்ள புனித பூமியொன்றை அண்மித்த பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

2010ம் ஆண்டு 14ம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் பிரகாரம், தேவையற்ற விதத்தில் ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இலங்கைக்குள் ட்ரோன் கமராவை பயன்படுத்த சிவில் விமான சேவை அதிகார சபையில் அனுமதி எடுக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.