Print this page

உக்கிரமடையும் மீனவர்கள் பிரச்சினை - மேலும் சிலர் கைது

February 27, 2022

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது மீனவர்களை, எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 23 நாட்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 21பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் தமிழக மீனவர்களிடமிருந்து பல காலக்கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும், மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைக்கப்படாமல், நாட்டுடைமையாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இப்படி தமிழக மீனவர்களுக்கு இலங்கை, தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. 

பெரும்பாலான கைது நடவடிக்கைகள் இந்திய கடல் எல்லையில் நடந்துள்ளன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் தான் கைது, படகு பறிமுதல் நடக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இரணைதீவுஅருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகை கைப்பற்றிய இலங்கை கடற்படை அவர்களை தற்போது அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையே விடுவிக்காத நிலையில், தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்து அட்டூழியத்தில் ஈட்டுள்ளனர்