Print this page

இலங்கை அணியினர் பயணிக்கவிருந்த பேருந்தில் தோட்டாக்கள் மீட்பு

February 28, 2022

 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக் குழுவினர் புறப்படவிருந்த பேருந்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி டெஸ்ட் தொடருக்காக பயணிக்கவிருந்த பேருந்தில் இருந்து குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணியினர் பேருந்தில் ஏறுவதற்கு முன் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.