Print this page

கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்பு செயலாளர்

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு வரவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே இந்திய பாதுகாப்புச் செயலாளர் வரவுள்ளார்.

இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலார் ஹேமசிறி பெர்னான்டோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இரண்டு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள், குறித்தும், பாதுகாப்புச் செயலார்கள் மட்டத்தில் நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 11 September 2019 01:49