Print this page

மக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் மிரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 6.50% மற்றும் 7.50% என 100 அடிப்படை புள்ளிகளாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.