Print this page

வாசுதேவ நாணயக்கார குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட கருத்து

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பதவி விலகும் நோக்கில் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் இருந்ததால் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தாமாக முன்வந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நீக்கம் செய்துள்ளதால் ஆட்சியை தக்க வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

தன்னை விமர்சிப்பவர்கள் எதிரிகள் அல்ல என்றும், பொறுமையாக பணியாற்ற வேண்டும் என்றும், அரசியல் சகிப்புத்தன்மை குறித்து பிரதமரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.