Print this page

மொரட்டுவை மேயரின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேயரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரட்டுவ குருச சந்தி பகுதியில் இருந்து காலி வீதியை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் வில்லோராவத்தை பகுதியிலுள்ள மொரட்டுவ மேயரின் இல்லத்திற்கு பேரணியாக சென்றனர்.

Last modified on Friday, 01 April 2022 14:58