Print this page

அரசாங்கத்தை கண்டித்து அமைச்சர் டளஸ் கருத்து

குடியுரிமைக்கான அரசியலமைப்பு உரிமையில் தலையிடாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு பிரஜைகளின் அரசியலமைப்பு உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புக்கள் இருந்தாலும், போராட்டக்காரர்களும் வன்முறையில் ஈடுபடாமல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதியாகப் போராட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஊடகவியலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து ஊடக சுதந்திரத்தை குழிபறிக்கும் வகையிலான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Sunday, 03 April 2022 09:27