Print this page

தொண்டமான் குடும்பம் மலையகத்தை விட்டு வெளியேற வேண்டும் என அழுத்தம்! ஜீவன் உடனடியாக ராஜினாமா!

ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சற்று முன்னர் விலகியுள்ளது.

அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வழங்கிய இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் சற்று நேரத்திற்கு முன்னர் ராஜினாமா செய்துள்ளார்.

தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது 1000 ரூபா சம்பள விடயம் மற்றும் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.

அதன் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி ஆதரவாளர்களும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தொண்டமான் குடும்பம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் மேலோங்கியது.

இந்நிலையில் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஏசியன் மிரருக்குத் தெரிய வந்துள்ளது.