Print this page

மின்வெட்டு நேரத்தில் ரயில்வே கடவைகளை பயன்படுத்வோர் கவனம்

மின்வெட்டுகளின் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் எச்சரித்துள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்தார்.

பெரும்பாலான ரயில் கடவைகள் மின்சாரத்தால் இயக்கப்படும் "பெல் மற்றும் லைட்" பொருத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மின் தடையின் போது அந்த ரயில் கேட்கள் பேட்டரியில் இயங்கும். ஆனால் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பேட்டரி திறன் குறைவடைந்துவிடும் , எனவே, பெல் மற்றும் லைட் அமைப்புகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம் எனவும் சாரதிகளையும் பாதசாரிகளையும் கவனமாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுள்ளது .

எனவே மின்வெட்டு ஏற்படும் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக செனவிரத்ன தெரிவித்தார்.