Print this page

ஏப்ரல் 11, 12 சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை விசேட பொது விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.