Print this page

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

புத்தாண்டு காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தொலைதூர சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றின் ஆதரவுடன் போக்குவரத்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்தவகையில், கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும், பின்னர் அது ஏப்ரல் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விடுமுறைக்கு வருபவர்கள் கொழும்புக்குத் திரும்புவதற்கு வசதியாக இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்காக சுமார் 172 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12 முதல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கை 296 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிகளை ஏனைய மாகாணங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 578 தனியார் பேருந்துகள் நிஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.