Print this page

பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான நடத்தை காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தை பிரயோகம் தொடர்பில் கலந்துரையாடுமாறு சபாநாயகரிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததை அடுத்து பாராளுமன்றம் ஐந்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

SLPP பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாசஸ்தலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

சில எம்.பி.க்களின் மோசமான நடத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான வி ம்பத்தை உருவாக்கியுள்ளது என்று முன்னாள் பிரதமர் கூறினார்.

"ஒட்டுமொத்த நாடும் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை சரியாகச் செய்ய முடியாவிட்டால், இந்த அமர்வை இடைநிறுத்துவது நல்லது. அவர்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிவரும் " என்று அவர் கூறினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன சபையை ஐந்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தினார்.