Print this page

புதுவருட தினத்தில் மின்சாரம் தடைபடுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு- PUCSL

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மின்சாரம் தடைபடுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் மற்றும் உலை எண்ணெய் பெறப்பட்டுள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் மின் வெட்டு மணித்தியாலங்கள் குறைவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.