Print this page

சில்வர்வுட் இலங்கை ஆண்கள் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டர்

இலங்கையின் தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர் மிக்கி ஆர்தரின் இரண்டு வருட ஒப்பந்தம் ஜனவரிலயில் முடிவடைந்ததை அடுத்து தற்போது காலியாக இருந்த பதவியை சில்வர்வுட் ஏற்றுக்கொள்கிறார்.

சில்வர்வுட் சமீபத்தில் இங்கிலாந்து ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார், ஆனால் பேரழிவு தரும் ஆஷஸ் தொடருக்குப் பிறகு நீக்கப்பட்டார், இங்கிலாந்து ஐந்து டெஸ்டுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்தற்காக .

2022 டி 20 உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய தொடரைத் தொடங்குவதற்கு முன், இலங்கையுடனான அவரது முதல் பணி அடுத்த மாதம் பங்களாதேஷில் ஆரம்பமாகும் எனவும் தெரியவருகின்றது .