Print this page

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தினசரி நட்டத்தயே எதிர்நோக்குகிறது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 327 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள்களை விற்பனை செய்தாளும் தினசரி  நட்டத்தை எதிர்நோக்குகிறது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ,குறைந்த குறுக்கீடுகளுடன் மின்சார விநியோகத்தை பராமரிக்க நாங்கள் தொடர்ந்து எரிபொருள்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் ,எவருக்காவது எரிபொருள் விலையைக் குறைக்க முடியுமாயின் அமைச்சுப் பதவியை அவர்களுக்கு வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார் .

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் (IOC) கலந்துரையாடியதாகவும் எதிர்காலத்தில் இரண்டு நிறுவனங்களின் எரிபொருள் விலையை சமமான அளவுகளில் அதிகரிப்பதற்கான சூத்திரத்தை கடைப்பிடிக்க உடன்பாடு ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்