Print this page

ஜனாதிபதிக்கு டளஸ் எழுதிய அதிரடி கடிதம்! குழப்பத்தில் மொட்டு அணி

 பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

ஒரு சிறிய அமைச்சரவையை உள்ளடக்கிய புதிய ‘சர்வ கட்சி’ அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். 

புதிய அமைச்சரவையானது சகல கட்சிகளையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வகட்சி அமைச்சரவையானது தேசிய நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.