Print this page

பிரதமர் பதவியை இராஜினா செய்து எதிர்கட்சியில் அமர மஹிந்த ராஜபக்ஷ முடிவு!!

 

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனாதிபதி கூறினால் தாம் இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் இணைய தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பின்னரே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துகொண்ட கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சமல் ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.