Print this page

"எனக்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன" - சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தனக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்துள்ளதாக இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

“நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு எனக்கு 24 மணி நேரமும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாக ஒரு அழைப்பாளர் என்னிடம் கூறினார். எனக்கு எப்பொழுதும் பொது மக்களின் ஆதரவு இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என மீரிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

"SJB யில் இருந்து யாரும் இடைக்கால அரசாங்கத்தில் சேர மாட்டார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.