Print this page

புதிய பிரதமர் பதவிக்கு காத்திருக்கும் அந்த நான்கு பேர்

தனக்கும் மேலும் நால்வருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தினேஸ் குணவர்தன தனக்கு நெருக்கமான பலருடன் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமக்கு பிரதமர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.