Print this page

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விற்பனைக்கு தயார்

சதொச ஊடாக மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை நாட்டின் அனைத்து பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
 
இதற்கமைய ஒரு கிலோகிராம் நாட்டரிசி 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது