Print this page

ஆறுமுகன் தொண்டமானின் ஊழல் லீலைகள்

 

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஊழல் பயில்களும் தம்மிடம் உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் அதன் அங்கத்தவர்களாக இருந்தவர்களில் ஊழல் மோசடிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்தும் ஜேவிபியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, கடந்த காலத்தில் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த தருணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த பயில் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ள அவர், அதில் ஒரு பயிலில் பாரியளவில் எரிபொருள் நிரப்புவதில் இடம்பெற்றுள்ள மில்லியன் கணக்கான மோசடிகள் தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும் அதுதொடர்பிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.