Print this page

பெற்றோல் டீசல் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு வாரங்கள் வரை விலை திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC (LIOC) ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகளை இணையான விலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.எனவே, இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் கையளிக்கப்படும் என்றார்.

ஒரு வெளிப்படையான எரிபொருள் விலை திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மக்களின் தோள்களில் சுமையை விட்டுவிடாமல் டொலர் சந்தைக்கு ஏற்ப CPC மற்றும் LIOC இரண்டின் விலைகளையும் பாதிக்கும் என்றார்.

சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பி மக்கள் தவறாக நடக்க வேண்டாம் எனவும், அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு இணங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.