Print this page

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதாக தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பலமான கோரிக்கைக்கு அமைவாகவே பிரதமர் பதவி விலகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜினாமா குறித்து தற்போது அறிவிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமைக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பதவி விலகுவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஒரு ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.