Print this page

ஐ.ஓ.சி எரிபொருள் விலையில் உயர்வு இல்லை - ஏரி சக்தி அமைச்சர்

லங்கா ஐ.ஓ.சி எரிபொருளின் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி அல்லது சிபெட்கோவில் விலை உயர்வு இல்லை என்றார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியான மற்றும் பொய்யான செய்திகளை பதிவிட்டு பகிர்பவர்களுக்கு எதிராக அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும்.