Print this page

நாட்டை மீட்கும் களத்தில் சஜித்! மத்திய வங்கி ஆளுநருடன் சந்திப்பு

மத்திய வங்கியின் ஆளுநருடன் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதச விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமரட்ன, கபீர் ஹாசிம் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.