Print this page

இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளை தீர்க்கும் முகமாக அவருடைய உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பில் தகவல் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இரவு 9 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை இடம்பெறவுள்ளது.