Print this page

மூன்று அமைச்சுக்களுக்கு மீண்டும் செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமிப்பு

பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களில் கடமையாற்றிய செயலாளர்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியினால் நேற்று முதல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், கே.எம். நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்