Print this page

நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கவில்லை,ஆனால் ரணிலையும் நம்பவில்லை -கம்மன்பில

ஒரு நாட்டை நடத்துவதற்கு அரசாங்கம் இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனினும் ரணில் விக்கிரமசிங்க மீதும் நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு அவரது வரலாறு களம் அமைக்கவில்லை என்றார்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தபோது பின்பற்றிய நிகழ்ச்சி நிரலை மேலும் அமுல்படுத்தாது, நாடு மேலும் பாதாளத்திற்குச் செல்லாத வகையில் தொடர்ந்தும் செயற்பட்டால், நாட்டை சீர்குலைக்காத வகையில் அரசாங்கம் செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்