Print this page

சஜித் அணியில் முக்கிய இருவர் அமைச்சரவையில்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய பிரமுகர்கள் கட்சியின் தீர்மானத்திலிருந்து விலகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார யுத்த அமைச்சரவையில் இணைய தீர்மானித்துள்ளனர் என கட்சிதகவல்கள் தெரிவித்தன என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதாரநெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகளை கட்சி தடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.