Print this page

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

நாட்டின் மேல், சப்ரகமுவ, வட மேல், மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று(17) 100 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனைத்தவிர, வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.