Print this page

நாட்டில் திடீரென இடைநிறுத்தப்பட்ட மிக முக்கிய சேவைகள்

தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்புக்குப் பிறகு இது மீண்டும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.